2012-12-06 16:05:00

காங்கோ குடியரசில் நடைபெறும் வன்முறைகளைத் தடுக்க உலக நாடுகளின் தலையீடு அவசியம் - இயேசு சபை JRSன் இயக்குனர்


டிச.06,2012. ஆப்ரிக்காவிலுள்ள காங்கோ குடியரசின் ஒரு பகுதியான Masisiயில் நடைபெறும் வன்முறைகளைத் தடுக்க உலக நாடுகளின் தலையீடு அவசியம் என்று இயேசு சபை அருள் பணியாளர் ஒருவர் கூறினார்.
காங்கோ குடியரசில் நடைபெறும் வன்முறைகள் குறித்து திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இப்புதன் மறைபோதகத்தின் இறுதியில் ஒரு சிறப்பான விண்ணப்பம் விடுத்திருந்தார்.
இந்த விண்ணப்பத்தைத் தொடர்ந்து, ஆப்ரிக்காவில் புலம்பெயர்ந்தோரிடையே பணிபுரியும் இயேசு சபை அமைப்பான JRSன் இயக்குனர் Isaac Kiyaka என்ற அருள் பணியாளர் Masisi பகுதி மக்களைக் காக்கும் விண்ணப்பத்தை Fides செய்தி நிறுவனத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.
Goma எனும் நகரைப் புரட்சிக் குழுக்கள் கைப்பற்றியபோது, பன்னாட்டு அரசுகளின் தலையீடு இருந்ததால், அங்கு நிலைமை ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுபோல், Masisi நகரிலும் பன்னாட்டு அரசுகளின் தலையீடு வேண்டுமென்று அருள் பணியாளர் Kiyaka விண்ணப்பித்துள்ளார்.
நிலத்தடி கனிமங்கள் நிறைந்துள்ள Masisi பகுதியில் புரட்சியாளர்கள் நுழைந்ததை அடுத்து, அங்கிருந்து மக்கள் ஆயிரக்கணக்கில் வெளியேறி வருகின்றனர் என்று Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.