இஸ்ரேல் நாட்டின் அரசுத் தலைவர் திருத்தந்தைக்கு Twitter வழியாக செய்தி
டிச.05,2012. "திருத்தந்தையே, Twitterக்கு உங்களை வரவேற்கிறேன். நமக்கிடையே நிலவும் உறவு
உலக அமைதியை வளர்க்கும் ஓர் உறவாக அமைய விழைகிறேன்" என்று இஸ்ரேல் நாட்டின் அரசுத் தலைவர்
Shimon Peres, திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுக்கு Twitter வழியாக ஒரு செய்தியை
அனுப்பியுள்ளார். இஸ்ரேல் நாட்டுக்குத் திருப்பீடத்தின் தூதராக நியமிக்கப்பட்டுள்ள
பேராயர் Giuseppe Lazzarotto அவர்களை இச்செவ்வாயன்று தன் அரசுத் தலைவர் இல்லத்தில் சந்தித்த
Peres, திருத்தந்தை இணையதளத்தில் Twitter வழியாக தன் தொடர்புகளை வளப்படுத்தியதற்காக தன்
மகிழ்வைத் தெரிவித்தார். இஸ்ரேல் நாட்டுக்குத் திருத்தந்தை அனுப்பியுள்ள சிறப்பான
வாழ்த்துக்களை அரசுத் தலைவர் Peresஇடம் சமர்ப்பித்த திருப்பீடத் தூதர் பேராயர் Lazzarotto,
இஸ்ரேலுக்கும் திருப்பீடத்திற்கும் இடையே நிலவும் உரையாடல்கள் வரும் நாட்களில் இன்னும்
வலிமை பெரும் என்ற தன் நம்பிக்கையை வெளியிட்டார். இன்றைய சமூகத்தொடர்பு தொழில்நுட்பத்தில்
திரு அவையின் இருப்பை வலியுறுத்தும் விதமாகவே இம்மாதம் 12ம் தேதி திருத்தந்தையின் Twitter
பக்கம் துவக்கப்படும் என்று திருப்பீட அதிகாரிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.