2012-12-04 15:10:27

மன்னார் தமிழ் மீனவர்களுக்கு 175 படகுகள் இந்தியா உதவி!


டிச.04,2012. இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட மன்னார் பகுதியைச் சேர்ந்த மீனவர்களுக்கு இந்தியா 175 படகுகளை வழங்கியுள்ளது.
இலங்கைக்கான இந்தியத் தூதர் அசோக் காந்தா, மன்னார் பகுதிக்குச் சென்று ரூ.7 கோடியே 10 இலட்சம் மதிப்புள்ள இந்தப் படகுகளை மீனவர்களிடம் ஒப்படைத்தார்.
இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அவசர நிவாரண உதவி வழங்குவதை நோக்கமாகக்கொண்ட இந்தியா, போரால் இடம்பெயர்ந்தவர்கள் மறுகுடியேற்றம் செய்யப்பட கவனம் செலுத்துகிறது என்ற இந்தியத் தூதர் அசோக் காந்தா, இந்திய வீட்டு வசதித் திட்டம், வடக்கு ரயில்வே மறுசீரமைப்புத் திட்டம் மற்றும் உள்கட்டமைப்புத் திட்டங்களையும் சுட்டிக்காட்டினார்.
தலைமன்னாருக்கும் இராமேஸ்வரத்துக்கும் இடையிலான படகுச் சேவை விரைவில் தொடங்க வேண்டும் என்று விரும்பும் இந்தியா, இந்த விடயத்தில் இலங்கையுடன் இணைந்து பணியாற்றவும் தயாராக உள்ளது என்றார் தூதர் காந்தா.








All the contents on this site are copyrighted ©.