2012-12-03 16:20:10

தேவசகாயம் பிள்ளையின் முத்திப்பேறு பட்டமளிப்பு விழாத் திருப்பலியில் இலட்சக்கணக்கான பக்தர்கள்


டிச.03,2012. நாகர்கோவிலில் இடம்பெற்ற தேவசகாயம் பிள்ளையின் முத்திப்பேறு பட்டமளிப்பு விழாத் திருப்பலியில் இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
புனிதர் பட்ட நிலைகளுக்கானத் திருப்பீடப் பேராயத்தின் தலைவர் கர்தினால் Angelo Amato, இறையடியார் தேவசகாயத்தை முத்திப்பெற்றவர் என அறிவித்தத் திருப்பலியில் இந்தியாவின் கர்தினால்கள் Oswald Gracias, Telespore Toppo, George Alenchery, புதிய கர்தினால் Baselios Cleemis உட்பட, நாற்பதுக்கும் அதிகமான பேராயர்களும், ஆயர்களும் கலந்து கொண்டனர்.
கோட்டாறு ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ், கர்தினால் Amato வுடன் முன்னிலை வகிக்க, ஆயிரத்திற்கும் மேற்பட்ட குருக்களும், அருள் சகோதரிகளும் இத்திருப்பலியில் கலந்துகொண்டனர்.
அரசு மற்றும் அரசியல் கட்சிகளின் சார்பில், தமிழக வனத்துறை அமைச்சர் KT பச்சைமால், கன்னியாகுமரி பாராளுமன்ற அங்கத்தினர் Helen Davidson , நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் நாஞ்சில் முருகேசன் உட்பட பலர் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.








All the contents on this site are copyrighted ©.