நவ.30,2012. இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தின் Khunti மறைமாவட்டத்தின் புதிய ஆயராக,
ஆயர் Binay Kandulna அவர்களை இவ்வெள்ளிக்கிழமையன்று நியமித்துள்ளார் திருத்தந்தை 16ம்
பெனடிக்ட். Khunti மறைமாவட்டத்தின் அப்போஸ்தலிக்க நிர்வாகியாகவும், ராஞ்சி உயர்மறைமாவட்டத்தின்
துணை ஆயராகவும் பணிபுரிந்துவந்த ஆயர் Binay Kandulna, 1964ம் ஆண்டு Gondraவில் பிறந்தவர்.
1994ம் ஆண்டில் Khunti மறைமாவட்டத்திற்கென குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்ட இவர்,
2009ம் ஆண்டு ராஞ்சி உயர்மறைமாவட்டத்தின் துணை ஆயராக நியமிக்கப்பட்டார். 2012ம் ஆண்டு
மார்ச் 5ம் தேதியன்று Khunti மறைமாவட்டத்தின் அப்போஸ்தலிக்க நிர்வாகியாக நியமிக்கப்பட்டார். ராஞ்சி
உயர்மறைமாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்ட Khunti மறைமாவட்டத்தில் Mundas பழங்குடி இன
மக்கள் பெரும்பான்மையாக உள்ளனர்.