2012-11-28 15:59:42

"பெண்களின் வறுமை: நம்மை எழுப்பிவிடும் ஓர் அழைப்பு" இலண்டன் மாநகரில் கருத்தரங்கு


நவ.28,2012. "பெண்களின் வறுமை: நம்மை எழுப்பிவிடும் ஓர் அழைப்பு" என்ற கருத்தில் டிசம்பர் 1ம் தேதி, வருகிற சனிக்கிழமையன்று இலண்டன் மாநகரில் கருத்தரங்கு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நவம்பர் 25, கடந்த ஞாயிறுமுதல் உலகின் பல நாடுகளிலும் துவக்கப்பட்டுள்ள "ஏன் வறுமை" மற்றும் "வறுமையைப் பழங்கால வரலாறாக்குவோம்" என்ற மையக் கருத்துடன் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இம்முயற்சிகளின் ஓர் அங்கமாக, பிரித்தானிய கத்தோலிக்கப் பெண்கள் அமைப்பு ஏற்பாடு செய்துள்ள ஒரு நாள் கருத்தரங்கில், வறுமை என்ற சமுதாய அவலத்தால் அதிக அளவு பாதிக்கப்படுவது பெண்களே என்ற கருத்து வலியுறுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
வறுமையிலிருந்து பெண்கள் விடுதலை பெற, ஒவ்வொரு நாட்டிலும் பெண்கள் சுயமாக வருமானம் ஈட்டும் முறைகளை அறிமுகப்படுத்தும் முயற்சிகளையும் இவ்வமைப்பினர் மேற்கொள்வர் என்று இவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர் Amy Daughton கூறினார்.








All the contents on this site are copyrighted ©.