நவ.29, 2012. கவிதைக் கனவுகள் - “நம்பிக்கை”...எழுதியவர் A.C. Mohamed Rizwan
முன்னேறனும் என்ற ஆவலில், முழுநேரமும் முயற்சித்தேன்….. எந்நேரமும் என் எண்ணங்களில்,
எழுந்திட
வேண்டும், என்ற தாரகமந்திரம் எதிரொலித்துக் கொண்டேயிருந்தது.. ஈரெட்டு வயதினில்
எடுத்து வைத்த அடி, மூவெட்டில் முட்டிப் போட வைத்து, நாலெட்டில் நான்கு திசையிலும், நன்றாகவே
பிரபலப்படுத்திவிட்டது என் பிறவிப் பலனை….
நன்றி நவில்கின்றேன்… உயிர் கொடுத்த
பெற்றோருக்கு… உணர்வு கொடுத்த ஆசான்களுக்கு… ஊக்கம் கொடுத்த நண்பர்களுக்கு….. உச்சத்தில்
என்னை நிறுத்திய உன்னதமான இறைவனுக்கு…..
நம்மை உயர்த்தும் சக்தி கல்வி… நம்மை
செதுக்கும் சக்தி பக்தி… நாளைய உலகம் நமக்கே என்று, நன்றே முடிவெடுப்போம்… அதை
இன்றே செயல்படுத்துவோம்…..!