ஐ.நா. விற்கான அரசியல் விவகார அதிகாரிகள் குழு - யாழ். ஆயர் சந்திப்பு
நவ.27,2012. ஐநாவிற்கான அரசியல் விவகார அதிகாரிகள் குழு ஒன்று, யாழ்ப்பாண ஆயர் தாமஸ்
சௌந்தரநாயகம் அவர்களை இச்செவ்வாயன்று காலை ஆயர் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியது. செவ்வாய்க்கிழமை
உள்ளூர் நேரம் காலை 11 மணிக்கு இடம்பெற்ற இச்சந்திப்பின்போது யாழ் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட
மீள்குடியேற்றங்கள், மக்களின் வாழ்வாதாரங்கள் மற்றும் அரசியல் தீர்வு என, பல்வேறு விடயங்கள்
கலந்துரையாடப்பட்டதாக யாழ். ஆயர் சௌந்தரநாயகம் தெரிவித்தார். தமிழ் மக்களுக்கு அரசியல்
தீர்வினைப் பெற்றுக் கொடுப்பதற்கு ஐக்கிய நாடுகள் நிறுவனம் இலங்கை அரசுக்கு அழுத்தம்
கொடுக்க வேண்டும் எனவும் யாழ். ஆயர் ஐநா பிரதிநிதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.