உலக தட்ப வெப்ப நிலை குறித்த தீர்மானங்களில் ஏழை நாடுகள் சார்பாக CAFOD
நவ.27,2012. உலக தட்ப வெப்ப நிலை குறித்த தீர்மானங்கள், சுற்றுச்சூழல் பிரச்சனைகளால்
பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் நலனை மனதில் கொண்டதாக இருக்கவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளது
கத்தோலிக்க உதவி அமைப்பான CAFOD. உலக தட்பவெப்ப நிலை மாற்றம் குறித்த ஐ.நா.வின் அனைத்துலக
கருத்தரங்கு கத்தார் நாட்டுத் தலைநகரில் இடம்பெற்று வருவது குறித்து கருத்து வெளியிட்ட
CAFOD அமைப்பு, தீய விளைவுகளை உருவாக்கும் வேதியல் வாயு வெளியேற்றம் குறைப்பு, தட்பவெப்ப
நிலை மாற்றங்களால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உதவி, தட்பவெப்ப நிலை மாற்றம் குறித்த
தீர்மானத்தில் தெளிவான முன்னேற்றம் போன்றவைகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. தட்பவெப்ப
மாற்றங்களால் உருவாகும் வறட்சி, வெள்ளப்பெருக்கு, புயல் போன்றவைகளால் 1980ம் ஆண்டுகளிலிருந்து
இதுவரை பத்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் எனக்கூறும் CAFOD கத்தோலிக்க
உதவி அமைப்பு, இவ்வாறு உயிரிழந்தவர்களுள் பெரும்பான்மையினர் ஏழை நாடுகளைச் சேர்ந்தவர்கள்
எனவும் தெரிவிக்கிறது.