இந்த ஆண்டில் மட்டும் கர்நாடகாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக 39 திட்டமிட்ட தாக்குதல்கள்
நவ.27,2012. இந்த ஆண்டில் மட்டும் இதுவரை இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் கிறிஸ்தவர்களுக்கு
எதிராக 39 திட்டமிட்ட தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக இந்தியக் கிறிஸ்தவர்களின் உலக அவை
அறிவித்துள்ளது. கடந்த வெள்ளியன்று பெல்லாரி மாவட்டத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதிகள்
குழு ஒன்று ஆங்கிலிக்கன் கிறிஸ்தவக் குரு மற்றும் கோவில் மீது தாக்குதல் நடத்தியதையும்,
அதே நாளில் இந்து அமைப்பு ஒன்று பெந்தகோஸ்தே கோவில் திறப்பு விழாவில் பிரச்சனை ஏற்படுத்தியதையும்
குறித்து கருத்து வெளியிட்ட இந்த இந்திய கிறிஸ்தவ உலக அவையின் தலைவர் சாஜன் ஜார்ஜ், கர்நாடக
கிறிஸ்தவர்களின் மனதில் மீண்டும் பயம் தலைதூக்கியுள்ளதாகத் தெரிவித்தார். இத்தகைய
தாக்குதல்கள் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி புரியும் மாநிலங்களில் தொடர்ந்து இடம்பெற்று வரும்
ஒன்று எனவும் கவலையை வெளியிட்டார் சாஜன் ஜார்ஜ்.