2012-11-26 15:25:10

புதியக் கர்தினால்களின் குடும்பத்தினரோடு திருத்தந்தை சந்திப்பு


நவ.26,2012. கடந்த சனிக்கிழமையன்று தன்னால் கர்தினால்களாக உயர்த்தப்பட்ட 6 பேரையும் அவர்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரோடு இத்திங்கள் காலை திருப்பீடத்தில் சந்தித்து உரைவழங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
புதியத் திருத்தந்தையைத் தேர்ந்தெடுப்பதில் பங்குபெறுவதுடன், முக்கிய விடயங்களில் திருத்தந்தைக்கு ஆலோசனை வழங்குவதும் கர்தினால்களின் பணி என்பதை சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, இரத்தம் சிந்தும் அளவுக்கும் சென்று கிறிஸ்துவின் மந்தையைக் காக்கவேண்டிய அர்ப்பணத்தைச் சுட்டிக்காட்டுவதாகவே கர்தினால்களின் இடுப்புக் கச்சையின் நிறம் உள்ளது என்றார்.
திருஅவையின் புனிதம், ஒன்றிப்பு மற்றும் அமைதியை உலகம் முழுவதும் ஊக்குவிப்பதில் திருத்தந்தையுடன் இணைந்து பணிபுரிவதில் கர்தினால்களுக்கு அனைவரின் செபங்களும் தேவை என்பதையும் எடுத்துரைத்தார் பாப்பிறை.







All the contents on this site are copyrighted ©.