2012-11-26 15:47:08

இஸ்லாமிய மதபோதனைக்கூட்டம் ஒன்றில் கல்ந்துகொள்ள மறுப்புத்தெரிவித்த மூன்று கத்தோலிக்கர்களுக்கு சிறை


நவ.26,2012. இஸ்லாமிய மதபோதனைக்கூட்டம் ஒன்றில் கலந்துகொள்ள மறுப்புத் தெரிவித்ததற்காக மாலி நாட்டில் மூன்று காங்கோ நாட்டு கத்தோலிக்கர்கள் சிறைவைக்கப்பட்டுள்ளனர்.
இஸ்லாமிய மதபோதனைக்கு செல்ல மறுத்த ஒரே காரணத்திற்காக Timbuktu நகரில் இவர்கள் சிறைவைக்கப்பட்டுள்ளது குறித்து, கிறிஸ்தவத்தலைவர்கள் தங்கள் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளனர்.
வட மாலியின் Timbuktu நகரை இவ்வாண்டு துவக்கத்தில் கைப்பற்றிய இஸ்லாமிய தீவிரவாதக் குழு ஒன்று, வன்முறைகளின் வழி ஷாரியா சட்டத்தை அங்கு அமுல்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இச்சட்டத்தின் துணைகொண்டு ஆட்சி செய்ய விரும்பும் இக்குழு, திருடர்களின் கைகளை வெட்டியும், புகைப்பிடிப்பவர்கள் மற்றும் மது அருந்துபவர்களை சாட்டையால் அடித்தும் தண்டனைகளை நிறைவேற்றி வருகிறது







All the contents on this site are copyrighted ©.