நவ.26,2012. இன்றைய இந்தியாவின் முதுகெலும்பாக மதமே இருப்பதாக மங்களூர் மறைமாவட்ட ஆயர்
அலோசியஸ் பால் டி சூசா தெரிவித்தார். 'இந்திய மதங்கள் குறித்த மறுசிந்தனை' என்ற தலைப்பில்
இடம்பெற்ற நான்காவது அனைத்துலகக் கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றிய ஆயர், வாழ்வின்
இரகசியங்களையும் அர்த்தங்களையும் புரிந்துகொள்ள முயல்வதே மதங்களின் இறுதிநோக்கம் என்பதை
வலியுறுத்தினார். பெரும்பான்மை இந்தியர்கள் இன்னும் ஆழமான மத நம்பிக்கையாளர்களாகவே
உள்ளார்கள் என்பதையும் எடுத்துரைத்தார் ஆயர் டி சூசா. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி
குறித்த மகிழ்ச்சியை வெளியிட்ட அதே வேளை, பொருளாதார வளர்ச்சியின் காரணமாக ஏழை பணக்காரர்
இடையேயான இடைவெளி அதிகரித்துள்ளது குறித்த கவலையையும் வெளியிட்டார் மங்களூர் ஆயர்.