ஹெயிட்டி நாட்டின் அரசுத் தலைவருடன் திருத்தந்தை சந்திப்பு
நவ.22,2012. இவ்வியாழன் காலை திருப்பீடத்தில் ஹெயிட்டி நாட்டின் அரசுத் தலைவர் Michel
Joseph Martelly அவர்களைத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் சந்தித்தார். திருப்பீடத்திற்கும்,
ஹெயிட்டி நாட்டுக்கும் இடையே நிலவும் நல்லுறவைக் குறித்து இச்சந்திப்பில் பேசப்பட்டது. 2010ம்
ஆண்டு ஹெயிட்டி நாட்டில் உண்டான நிலநடுக்கத்தின்போதும், அதற்குப் பின்னரும் திருஅவையும்
திருப்பீடமும் தங்கள் நாட்டுக்குச் செய்த உதவிகளை அரசுத் தலைவர் Martelly திருத்தந்தையிடம்
நன்றியுடன் நினைவு கூர்ந்தார். இச்சந்திப்பிற்குப் பின், ஹெயிட்டி அரசுத் தலைவர் திருப்பீடச்
செயலர் கர்தினால் தர்சிசியோ பெர்தோனே அவர்களையும், நாடுகளுடனான உறவுகளின் செயலர் பேராயர்
டோமினிக் மம்பெர்த்தி அவர்களையும் சந்தித்து உரையாடினார்.