2012-11-22 15:45:15

சிறைகள் வாரத்தில் திருஅவையின் முயற்சிகள்


நவ.22,2012. நண்பர்களுடன் அரட்டை அடிப்பதிலும், பகல் கனவுகளிலும் மூழ்கியிருக்கும் நாம், ஒவ்வொருநாளும் ஒரு சில மணித்துளிகளாவது ஒதுக்கி, அமைதியான செபத்தில் இறைவனுடன் அந்நேரத்தைச் செலவிடுவது நல்லது என்று பிரித்தானியாவின் திருப்பீடத் தூதர் பேராயர் Antonio Mennini கூறினார்.
நவம்பர் 18, கடந்த ஞாயிறு முதல் நவம்பர் 24 இச்சனிக்கிழமை முடிய திருஅவையில் கடைபிடிக்கப்படும் சிறைகள் வாரம் என்ற முயற்சிகளின் ஓர் அங்கமாக, பேராயர் Mennini இப்புதனன்று Feltham எனுமிடத்தில் அமைந்துள்ள வளர் இளம் பருவத்தினர் சிறையில் உள்ளவர்களுக்குத் திருப்பலி நிறைவேற்றி, மறையுரை வழங்கியபோது இவ்வாறு கூறினார்.
சிறையில் உள்ளவருக்கென சிறப்பான பணியாற்றும் ஆன்மீகக் குருக்களின் அர்ப்பண சிந்தனையை, பேராயர் Mennini சிறப்பாகப் பாராட்டினார்.
'வாழ்வை நோக்கிச் செல்லும் பாதையைத் தேர்ந்தெடுத்தல்' ‘இறுதியாக வீடு நோக்கி’ போன்ற மையக் கருத்துக்களுடன் இவ்வாண்டுக்கான சிறைகள் வாரம் சிறப்பிக்கப்படுகிறது.








All the contents on this site are copyrighted ©.