2012-11-19 15:38:20

கவிதைக் கனவுகள்சகோதரனைத் திருத்தும் வழி


“உன்நண் பனுடன் உனக்கு வந்து
உற்றது தகராறா?
தன்னந் தனியே அவனிருக் குங்கால்
சரிசெயப் பேசிவிடு!
பின்னும் அவனதைப் பெரிதென மதித்தால்
பெரியவர் இருபேரை
உன்னுடன் அழைத்துச் சாட்சிக ளாக்கி
உள்ளத்தை மாற்றிவிடு

அப்படி யும்அவன் கோபமுற் றிருந்தால்
அடுத்தது பொதுச்சபையே!
எப்படி யாவது சபைமுனம் வைத்து
எண்ணத்தை மாற்றிவிடு
இப்பொழு தும்அவன் திருந்தா திருந்தால்
நட்பினை விட்டுவிடு
அப்பொழு தேஅவன் அன்பனில் லைநீ
அந்நிய னாக்கிவிடு!”








All the contents on this site are copyrighted ©.