2012-11-19 16:10:35

ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு ஆதரவான சட்டத்தை எதிர்த்து பிரான்சில் கண்டனப் பேரணி


நவ.19,2012. பிரான்ஸ் நாட்டில், ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்வதை ஆதரிக்கும் வகையிலும், ஓரினச் சேர்க்கையாளர்கள் குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்கவும் அனுமதி வழங்கப்பட்டு சட்டம் ஒன்று இயற்றப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கத்தோலிக்கத் திருஅவையினரும், வலதுசாரி அமைப்பினரும் இணைந்து, இச்சனி, மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பிரான்ஸ் நாட்டின் பல நகரங்களில் போராட்டம் நடத்தினர்.
இவர்கள் "ஒரு குழந்தைக்கு ஒரு தாயும், தந்தையும் தான்" என்று முழக்கமிட்டனர். தலைநகர் பாரிஸில் மட்டும் 15,000க்கும் மேற்பட்ட மக்கள் கூடி போராட்டம் நடத்தினர்.
இப்போராட்டத்தில் அதிகளவில் பங்கேற்ற இளையோர், இப்புதிய சட்டம் குழந்தைகளுக்கு இழைக்கப்படும் அநீதி என்று கூறினர்.








All the contents on this site are copyrighted ©.