அகில உலக இளையோர் நாளில் கலந்துகொள்ளச் செல்லும் அனைவருக்கும் அனுமதி சீட்டு (visa)இலவசம்
நவ.19,2012. வருகிற 2013ம் ஆண்டு பிரேசில் நாட்டில் நடைபெறவிருக்கும் அகில உலக இளையோர்
நாளில் கலந்துகொள்ளச் செல்லும் அனைவருக்கும் அந்நாட்டுக்குள் நுழைவதற்கான அனுமதி சீட்டு
(visa) இலவசமாக வழங்கப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. 2013ம் ஆண்டு,
ஜூலை மாதம் 23ம் தேதி முதல் 28ம் தேதி முடிய பிரேசில் நாட்டின் ரியோடிஜெனீரோ நகரில்,
திருத்தந்தையின் தலைமையில் நடைபெறும் இளையோர் நாளில் கலந்து கொள்வோர், தங்கள் முன்பதிவு
அத்தாட்சியைக் காட்டினால், அவர்களுக்கு இலவசமாக அனுமதிச் சீட்டு அளிக்கப்படும் என்று
கூறப்பட்டுள்ளது. இந்த அனுமதிச் சீட்டு 90 நாட்களுக்குச் செல்லுபடியாகும் என்றும்,
விருப்பமுள்ளோர் இதனை ஓராண்டுக்கு நீட்டிக்கவும் முடியும் என்றும் பிரேசில் நாட்டு பன்னாட்டு
உறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.