இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சனைகளைத் தீர்க்க, வன்முறை என்றும் வழிவகுக்காது
- எருசலேம் ஆயர்
நவ.17,2012. இஸ்ரேல் இராணுவத்திற்கும், பாலஸ்தீனப் போராளிகளுக்கும் இடையே மீண்டும் மோதல்கள்
உருவாகியிருப்பதால், அதிக அளவு பாதிக்கப்படுவது அப்பாவி மக்களே என்று எருசலேம் ஆயர் ஒருவர்
கூறினார். நவம்பர் 14, கடந்த புதனன்று இஸ்ரேல் இராணுவமும், பாலஸ்தீனர்களும் மேற்கொண்ட
தாக்குதல்களில் இதுவரை 15க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று CNA
கத்தோலிக்கச் செய்தி நிறுவனம் கூறியது. இம்மக்களுக்காக செபிப்பது மட்டும் போதாது,
இவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்பட வேண்டும் என்று எருசலேம் இலத்தீன்
ரீதி ஆயர் William Shomali, வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியொன்றில் கூறினார். இஸ்ரேல்-
பாலஸ்தீனப் பிரச்சனைகளைத் தீர்க்க, வன்முறை என்றும் வழிவகுக்காது என்று கூறிய ஆயர் Shomali,
பன்னாட்டுத் தலையீடு இப்பிரச்சனையைத் தீர்க்க மிகவும் அவசியம் என்று வலியுறுத்தினார்.