நவ.15,2012. சூரிய ஒளி, காற்று, மின் ஆற்றல்களை கொண்டு இயங்கக்கூடிய ஆட்டோ ஒன்றை திண்டுக்கல்
பி.எஸ்.என்.ஏ., கல்லூரி பேராசிரியர் மோசேதயான் அவர்களும், மின்னணுவியல் துறை மாணவர்களும்
இணைந்து உருவாக்கியுள்ளனர். இந்த ஆட்டோ இயங்கும்போது சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு
ஏற்படாது. ஆட்டோவை ஒரு முறை முழு அளவில் சார்ஜ் செய்தால், 96 கி.மீ., தூரத்திற்குத் தற்போதைய
ஆட்டோக்கள் இயங்கும் வேகத்தில் இயக்கமுடியும் என்கின்றனர். இந்தியாவில், ஆண்டுக்கு
300 நாட்கள் சூரிய ஒளி கிடைக்கும். காற்றலை சக்தியும் கிடைக்கும். சூரிய ஒளி மின்தகடுகள்
பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட காற்றாலைகள் மற்றும் மின்சக்சதியின் மூலம் சேகரிக்கப்படும்.
இச்சக்தி, ஆட்டோவில் இணைக்கப்பட்டுள்ள மின்கலத்தில் சேமிக்கப்படும். ஆட்டோவில் ஆற்றல்
குறைந்து விட்டால், பெட்ரோல் மூலமாகவும் இயக்க முடியும். நாட்டுக்குப் பயன்படும்
வகையில் உருவாக்கி முடித்துள்ள இந்த ஆட்டோ, ஆரம்ப நிலையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, மேலும்
சில மாற்றங்கள் செய்து வர்த்தக ரீதியாக உற்பத்தி செய்யும்போது, அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள்,
என்றனர் திண்டுக்கல் கல்லூரி பேராசிரியரும், மாணவர்களும்.