2012-11-15 15:59:59

Rimsha Masihயின் வழக்கில் இன்னும் ஒரு சில நாட்களில் தீர்ப்பு வெளியாகும்


நவ.15,2012. எப்பாவமும் அறியாத சிறுமி Rimsha Masihக்கு தகுந்த நீதியான ஒரு தீர்ப்பு வெளிவருவதை நம்பிக்கையுடனும், செபங்களுடனும் நாங்கள் எதிர்பார்த்திருக்கிறோம் என்று பாகிஸ்தான் ஆயர் பேரவையின் நீதி, அமைதிப் பணிக்குழுவின் தலைவர் அருள்தந்தை Emmanuel Yousaf கூறினார்.
இஸ்லாமியப் புனித நூலான குரானின் பக்கங்களை எரித்தார் என்ற பொய் குற்றம் சாட்டப்பட்டு, தேவநிந்தனை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட Rimsha Masihயின் வழக்கு விசாரணைகள் முடிவடைந்துள்ளன. இன்னும் ஒரு சில நாட்களில் தீர்ப்பு வெளியாகும் என்று தெரிகிறது.
ஆகஸ்ட் மாதம் கைதான Rimsha Masih, மனநலம் குன்றியவர் என்பதும், இவரது பையில் எரிக்கப்பட்ட குரானின் பக்கங்களை மற்றொருவர் வைத்தார் என்பதும் இவ்வழக்கில் உலக ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தது.
நல்லதொரு தீர்ப்பு கொடுக்கப்பட்டு, இச்சிறுமி விடுதலை செய்யப்படுவார் என்று நம்புவதாகக் கூறிய அருள்தந்தை Emmanuel Yousaf, பாகிஸ்தானில் நிலவிவரும் தேவநிந்தனைச் சட்டம் எவ்வளவு அநீதியாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதற்கு இச்சம்பவம் துன்பகரமான ஓர் எடுத்துக்காட்டு என்று கூறினார்.








All the contents on this site are copyrighted ©.