திசைகள் வெவ்வேறுதான் ஆனால் நம் ஆசிரிய தெய்வங்கள் ஒன்று ! பள்ளிகள் வெவ்வேறுதான்
ஆனால் நம் பயணங்கள் ஒன்று!
பருவப்பந்தலில், காதலெனும் பூக்கள் பூத்திருக்கலாம்,
உதிர்ந்தும் போயிருக்கலாம்! ஆனால்! நம் நட்பெனும் பூக்கள் நொடியில் பூத்தவை,
நம் இதயத்தில்! நம் உடல்கள் இம்மண்ணுக்கு உணவாகும் வரை உதிராதவை.
சின்ன
சின்ன சண்டைகள், செல்லமான கோபங்கள், இருந்தபோதிலும், நிழல்களால் நாம் நலம் விசாரித்துக்கொண்ட
நாட்களும் உண்டு.
ரத்த பந்தங்கள் இல்லை, தூரத்து சொந்தங்களும் இல்லை,
தோழர்கள் என்ற தொட்டருநோயால் வந்த தொடர்கதை இது ஒருபோதும் ஓயாது.
மாதங்கள்
ஓடினாலும் பிரிவுகள் அரங்கேறினாலும் எத்தனை பதவிகள் நாம் வகித்தாலும் நம்மை
இணைத்த இக்கல்லூரி என்றென்றும் அழியாச்சின்னமே....