பாகிஸ்தான் சிறையில் பொய்க்குற்றஞ்சாட்டப்பட்டுள்ள கிறிஸ்தவகுடும்பம்
நவ.13,2012. ஆள்கடத்தலில் ஈடுபட்டதாகபொய்க்குற்றஞ்சாட்டப்பட்டு பாகிஸ்தான் நாட்டில் கிறிஸ்தவகுடும்பம்
ஒன்று சிறையிலடைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் Faisalabadஐச்சேர்ந்த Sharif Masih
என்ற ஏழை கிறிஸ்தவ விவசாயியின் மகன் ஓர் இஸ்லாமிய பெண்ணுடன் ஓடியதைத்தொடர்ந்து, Masihன்
மூன்று மகள்களையும் அவர்களின் கணவர்களையும் கைதுச் செய்த காவல்துறை, கத்தோலிக்க நீதி
மற்றும் அமைதி அவையின் துணையுடன் அவர் போராடியதைத்தொடர்ந்து, அவரின் மகள்களை மட்டும்
விடுதலைச் செய்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் திருமணமாகாத இஸ்லாமியப்
பெண்ணுடன் வீட்டை விட்டு ஓடிய திருமணமான Babar Masih என்ற இளைஞரைச் சட்டம் மூலம் தண்டிப்பதில்
தவறில்லை, ஆனால் எக்குற்றமும் செய்யாத அவரது சகோதரிகளின் கணவன்களைப் பல மாதங்களாகச் சிறைவைத்திருப்பது
ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது எனக்கூறும் பாகிஸ்தான் தலத்திருஅவை, அவர்கள் உடனடியாக விடுவிக்கப்படவேண்டும்
என்ற விண்ணப்பத்தையும் முன்வைத்துள்ளது.