2012-11-13 15:53:09

ஒழுக்கநெறிகளும் ஆன்மீகமும் காணாமல்போயிருப்பதே சமூகத் தீமைகளுக்கான மூலக்காரணம்


நவ.13,2012. இந்திய மக்களின் கலாச்சார வாழ்வின் அங்கமாக இருக்கும் தீபாவளித் திருவிழா மகிழ்ச்சிநிறை மற்றும் முழுமையான வாழ்விற்கான தூண்டுதலை வழங்குவதாக இருக்கவேண்டும் என அழைப்பு விடுத்தார் இந்தியாவின் பூனே ஆயர் Thomas Dabre.
சமூகத்தில் நிலவும் இலஞ்ச ஊழலை அகற்ற வேண்டியதன் தேவையை வலியுறுத்திய பூனே ஆயர், தீமையின் மீது நன்மை வெற்றி கண்ட திருவிழாவைச் சிறப்பிக்கும் நாம், சமூகத்தில் நிலவும் இலஞ்ச ஊழலை அகற்ற வேண்டியதன் தேவையை உணர்ந்துச் செயல்படவேண்டும் என்றார்.
மக்களிடையே ஒழுக்கநெறிக்கும் ஆன்மீகத்திற்கும் ஊக்கமளிப்பதன் மூலம் இலஞ்ச ஊழலை அகற்றமுடியும் என்ற ஆயர் Dabre, மெய்யியலாளர்களாலும், புனித மக்களாலும், புனித தலங்களாலும் நிறைந்து காணப்படும் இந்தியாவில் இலஞ்ச ஊழல் இவ்வளவுப் பரவலாகக் காணக்கிடப்பது வெட்கத்திற்குரியதாக உள்ளது என்றார்.
ஒழுக்கநெறிகளும் ஆன்மீகமும் சமூகத்தில் காணாமல்போயிருப்பதே அனைத்துத் தீமைகளுக்கான மூலக்காரணம் என மேலும் கூறினார் பூனே ஆயர் Dabre.








All the contents on this site are copyrighted ©.