2012-11-13 15:57:40

இலங்கை தலைமை நீதிபதி மீதான குற்றச்சாட்டு குறித்து இலங்கை ஆயர்கள்


நவ.13,2012. இலங்கையில் தலைமை நீதிபதி மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு அவரைப் பாராளுமன்ற வாக்கெடுப்பு மூலம் அகற்றும் முயற்சிகள் குறித்து கண்டனத்தை வெளியிட்டுள்ளனர் இலங்கை ஆயர்கள்.
தலைமை நீதிபதி மீதான குற்றங்கள் குறித்த விளக்கங்கள் இல்லை எனக்கூறும் ஆயர்கள், நிர்வாகம், சட்டத்துறை மற்றும் நீதித்துறை ஆகிய மூன்றும் தனித்தனியாக இயங்க வேண்டியவை எனவும் கூறியுள்ளனர்.
நீதித்துறையின் சுதந்திரம் அரசின் அண்மை நடவடிக்கைகளால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது எனவும் கூறியுள்ளனர் ஆயர்கள்.
இலங்கை அரசுத்தலைவரின் சகோதரர் பசில் ராஜபக்ஷே தலைமையின் கீழ் இயங்கும் பொருளாதார வளர்ச்சி அமைச்சகத்தின்கீழ் நிதி பரிமாற்றங்களைக் கொணரும் சட்டத்தை நிறைவேற்ற காலம் தாழ்த்தியதும், மாநில அவைகளின் அதிகாரத்தை மைய அரசு எடுத்துக்கொள்ள முயன்றதை எதிர்த்ததும் தலைமை நீதிபதி Shirani Bandaranayake செய்த குற்றங்களாக வல்லுனர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
தலைமை நீதிபதிக்கு எதிராக, 14 குற்றங்களை முன்னிறுத்தி ஆளுங்கட்சியின் 117 அங்கத்தினர்கள் பாராளுமன்றத்தில் வைத்துள்ள பதவி நீக்கலுக்கான விண்ணப்பம் அவைத்தலைவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது







All the contents on this site are copyrighted ©.