2012-11-12 17:17:44

கந்தமால் மாவட்டத்தில் கிறிஸ்தவக் கல்லறைகள் சேதமாக்கப்பட்டுள்ளன


நவ.12,2012. இந்தியாவின் ஒரிசா மாநில கந்தமால் மாவட்டத்தின் மிடியாக்கியா கிராம கிறிஸ்தவ கல்லறைத்தோட்டத்தில் புகுந்த அடையாளம் தெரியாத சிலர், அங்குள்ள சிலுவைகள் அனைத்தையும் அகற்றியுள்ளதாக அப்பகுதியிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
அனைத்துக் கல்லறைகளின் சிலுவைகளும் அகற்றப்பட்டதோடு, அக்கல்லறைத் தோட்டத்தில் இருந்த மரங்களையும் செடிகொடிகளையும் அவர்கள் சேதமாக்கிச் சென்றுள்ளாதாக மெத்தடிஸ்ட் கிறிஸ்தவ சபை குரு கௌரங்கோ நாயக் தெரிவித்தார்.
கவல்துறையிடம் இது குறித்த புகார் முன்வைக்கப்பட்டுள்ளபோதிலும், இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.








All the contents on this site are copyrighted ©.