2012-11-10 16:36:52

நவம்பர் 10 பாகிஸ்தான் சிறுமி Malalaவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நாள் – ஐ.நா. அறிவிப்பு


நவ.10,2012. பெண்களின் கல்விக்காகப் போராடியதால் தலிபான் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி, தற்போது சிகிச்சை பெற்றுவரும் பாகிஸ்தான் சிறுமிக்கு அர்ப்பணிக்கப்பட்ட நாளாக, இம்மாதம் 10ம் தேதி, சனிக்கிழமையை அறிவித்துள்ளார் ஐ.நா. போதுச்செயலர் பான் கி மூன்.
பாகிஸ்தானில் உள்ள தாலிபான் தீவிரவாதிகளால் சுடப்பட்டு, தலையில் காயமடைந்த 15 வயது சிறுமி Malala Yousafzai யைக் கௌரவிக்கும் விதமாக, நவம்பர் 10ம் தேதியை 'Malala நாள்' என அறிவித்த ஐ.நா. பொதுச்செயலர், உலகம் முழுவதும் பெண்களின் கல்விக்குத் தூண்டுதலாக இருந்த Malala வை ஐ.நா. கொண்டாடுகிறது என்றார்.
இதற்கிடையே, பாகிஸ்தான் அரசுத்தலைவர் Asif Ali Zardariயைச் சந்திக்க பாகிஸ்தான் சென்ற ஐ.நா.வின் உலகக் கல்விக்கானச் சிறப்புத் தூதர், பாகிஸ்தானில் பெண்கள் கல்வி முழு செயல்வடிவம் பெறவேண்டும் என 10 இலட்சம் பேர் கையெழுத்திட்ட விண்ணப்பம் ஒன்றை ஒப்படைத்தார்.
மேலும், பாகிஸ்தான் சிறுமி Malalaவுக்கு நொபெல் அமைதி விருது வழங்கப்படவேண்டும் என்று பல ஆயிரக் கணக்கானோர் கையெழுத்திட்டு விண்ணப்பம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.