திருப்பீட சட்டக் கல்லூரியின் கல்வியாண்டு துவக்கத்தில் திருப்பீடச் செயலர் வழங்கிய
உரை
நவ.09,2012. சட்டம், ஒழுங்கு பற்றிய கிறிஸ்தவ உரோமைய பாரம்பரியம் மிக உறுதியான அடித்தளம்
கொண்டது என்று திருப்பீடச் செயலர் கர்தினால் தர்சிசியோ பெர்தோனே கூறினார். இவ்வியாழன்
மாலை வத்திக்கானில் Roman Rota எனப்படும் திருப்பீட சட்டக் கல்லூரியின் கல்வியாண்டைத்
துவக்கிவைத்துப் பேசிய கர்தினால் பெர்தோனே இவ்வாறு கூறினார். திருப்பீடச் சட்டக் கல்லூரியின்
மீது தான் கொண்டுள்ள பெரும் மதிப்பைக் குறித்துப் பேசிய கர்தினால் பெர்தோனே, Roman Rota
அமைப்பிற்கு திருத்தந்தையரின் முழு ஆதரவு என்றும் இருந்தது என்பதை வலியுறுத்தினார். திருஅவை
என்ற குறுகிய வட்டத்தையும் தாண்டி, உலகின் பல துறைகளிலும் சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்தும்
வகையில் Roman Rota பணிபுரிந்துள்ளதையும் கர்தினால் பெர்தோனே தன் உரையில் சுட்டிக்காட்டினார்.