2012-11-08 15:37:14

நவம்பர் 08, 2012 கவிதைக் கனவுகள் - மருத்துவமனை (தமிழ்த்தோட்டம் என்ற இணையத்தள பக்கத்தில் வித்யாசாகர் எழுதியது)


வரிசையாய் நிற்கும்
நோயாளிகளின் வலி கூட்டும்
நிர்வாகம்.

பணம் போட்டு
நலம் காக்கும்
பொதுச்சேவை வியாபாரம்;

உயிரோடு
விளையாடி -
தொழில் கற்கும் ஏகாந்தம்;

உயிர் கொடுத்தும்
உயிர் காக்கும் -
மதம் தாண்டிய மருத்துவாலயம்!

ஏழைகளின் உயிர் வருத்தியும்
உயிர் காத்தும் வளரும் -
செங்கல், மண் கட்டிடம்.

மருத்துவரில்லாத அவசரத்தில்
உயிர் காத்த – செவிலித் தாய்களின்
அன்பு பூக்கும் தளம்!

இவை எல்லாம் கடந்து –
எத்தனையோ அலறல்களும்
கண்ணீர்க் கதறல்களும் –
உயிர்பிரிந்த கணப் பொழுதுகளும்
ஓர் இரசாயன மனமாய்க் காற்றில் கலந்து
காற்றாக மாறிய இடம்!








All the contents on this site are copyrighted ©.