சிரியாவில் கடத்தப்பட்டுள்ள பத்து அப்பாவி மக்களை விடுவிக்கும் முயற்சிகள்
நவ.08,2012. சிரியாவில் அண்மைய நாட்களில் கடத்தப்பட்டுள்ள பத்து அப்பாவி மக்களை விடுவிக்கும்
முயற்சிகள் நடைபெற்று வருகின்றன என்று Aleppo வின் Maronite ரீதி பேராயர் Youssef Anis
Abi-Aad கூறினார். சிரியாவில் அரசுக்கும், புரட்சிக் குழுக்களுக்கும் இடையே தொடர்ந்து
வரும் மோதல்களின் விளைவாக, எப்பாவமும் அறியாத மக்கள் நாளுக்கு நாள் ஆபத்துக்களைச் சந்தித்து
வருகின்றனர் என்பதற்கு அண்மைய கடத்தல்கள் ஓர் எடுத்துக்காட்டு என்று கூறிய பேராயர் Abi-Aad,
கடத்தப்பட்டவர்களை மீட்பதற்கு இயேசு சபை அருள்பணியாளர் Murad Abi Seif தலைமையில் ஒரு
குழுவினர் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர் என்று Fides செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். சிரியாவில்
நிகழ்ந்துவரும் மோதல்களின் விளைவாகப் பாதிக்கப்பட்டுள்ள 450 பேருக்கும் மேற்பட்ட மக்களுக்கு
இயேசு சபையினரும், பிரான்சிஸ்கன் சபை அருள்சகோதரிகளும் ஒவ்வொரு நாளும் 6000க்கும் அதிகமான
உணவுப் பொட்டலங்கள் தயாரித்து வழங்குகின்றனர் என்றும் Maronite ரீதி பேராயர் கூறினார். அமைதிக்கான
ஏக்கம் கிறிஸ்தவ, இஸ்லாமிய மக்கள் மனங்களில் பெருமளவு எழுந்துள்ளது என்றும், மோதல்களில்
ஈடுபட்டிருக்கும் குழுக்கள் இடையிலும் இந்த வேட்கை உருவாகும் நாளை எதிர்நோக்கிச் செபித்து
வருகிறோம் என்றும் பேராயர் Abi-Aad கூறினார்.