2012-11-07 16:14:50

நலம் குறித்த பிரச்சனை மிகுந்த சட்டவரைவுக்கு எதிராக நவம்பர் 12 பிலிப்பின்ஸ் நாட்டில் செபநாள்


நவ.07,2012. பிலிப்பின்ஸ் நாட்டில் மக்கள்பேறு நலம் குறித்த பிரச்சனை மிகுந்த சட்டவரைவுக்கு எதிராக நவம்பர் 12, வருகிறத் திங்களன்று, கத்தோலிக்கர்கள் அனைவரும் செபத்தில் இணையுமாறு அந்நாட்டு ஆயர் ஒருவர் அழைப்பு விடுத்துள்ளார்.
பிலிப்பின்ஸ் ஆயர் பேரவையின் குடும்பநல பணிக்குழுவின் தலைவர் ஆயர் Gabriel Reyes, கருவில் வளரும் குழந்தைகள் மனித குலத்திலேயே மிகவும் சக்தியிழந்த உயிர்கள் என்றும், இவர்களுக்காக நமது செபங்கள் மிகவும் தேவை என்றும் கூறினார்.
பிலிப்பின்ஸ் அரசு சட்டமாக்க விழையும் இச்சட்டவரைவால், கருத்தடைச் சாதனங்கள் மிக எளிதாகக் கிடைக்கும் என்றும், 5ம் வகுப்பு பயிலும் குழந்தைகளும் பாலியல் கல்வி பயில வற்புறுத்தப்படுவார்கள் என்றும் சொல்லப்படுகிறது.








All the contents on this site are copyrighted ©.