சிரியாவின் உள்நாட்டுப் போரால் தாய்மார்களும் குழந்தைகளும் பெருமளவில் பாதிப்பு
நவ.06,2012. சிரியாவின் உள்நாட்டுப் போரால் தாய்மார்களும் குழந்தைகளும் குறிப்பாக புதிதாகப்
பிறந்த குழந்தைகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக UNICEF என்ற ஐநாவின் குழந்தைகள்
நிதி அமைப்பு அறிவித்துள்ளது. போரின் காரணமாக பெருமளவில் குழந்தைகள் பாதிக்கப்படுவதால்
அவர்களுக்குப் போதிய அளவு வசதிகள் மருத்துவமனைகளில் இல்லை என அறிவித்த ஐநா அதிகாரி Marixie
Mercado, 120 படுக்கை வசதிகள் உடைய மருத்துவ மனையில் 200 குழந்தைகள் சிகிச்சைக்காகக்
காத்திருப்பதாகத் தெரிவித்தார். இப்போரின் பாதிப்புகள், கருத்தாங்கிய பெண்களின் மனநிலையை
பெருமளவில் பாதித்துள்ளதாகவும் கவலையை வெளியிட்டார் அவர். கடந்த 20 மாதங்களாக சிரியாவில்
இடம்பெற்றுவரும் உள்நாட்டுப்போரில் குறைந்தபட்சம் 20,000 பேர் உயிரிழந்துள்ளனர், 25 இலட்சம்
மக்களுக்கு அவசர உதவிகள் தேவைப்படுகின்றன.