தமிழகத்தில் 11.50 இலட்சம் வழக்குகள் நிலுவை, நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா தகவல்
நவ.05,2012. தமிழக நீதிமன்றங்களில், 11 லட்சத்து, 50 ஆயிரத்து, 809 குற்றவியல் சாராத
மற்றும் குற்றவியல் சார்ந்த வழக்குகள் நிலுவையில் உள்ளன, என, உச்ச நீதிமன்ற நீதிபதி இப்ராகிம்
கலிபுல்லா கூறினார். தமிழ்நாடு நீதித் துறை ஊழியர் சங்கத்தின் 10வது மாநாட்டில் கலந்துகொண்டு
உரையாற்றிய நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா, குற்றவியல் சாராத மற்றும் குற்றவியல் சார்ந்த்து
என, கடந்த, 2006ல் மொத்தம், எட்டு லட்சத்து, 56 ஆயிரத்து, 809 வழக்குகள் இருந்த நிலையில்
தற்போது, நிலுவை வழக்குகளின் எண்ணிக்கை, 11 லட்சத்து, 83 ஆயிரத்து, 244ஆக அதிகரித்துள்ளன
என்றார். மக்கள் நீதித்துறை மீது காட்டும் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டிய நிர்ப்பந்ததில்
நாம் இருக்கிறோம் என்ற நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா, தமிழகத்தில், மொத்தம் 8,051 நீதிமன்றங்கள்
உள்ளன என்பதைக் குறிப்பிட்டு, விஞ்ஞான ரீதியாக ஏற்பட்டுள்ள வளர்ச்சிக்கேற்ப, நீதித் துறையினர்
பயிற்சி வகுப்புகளுக்கு சென்று திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற விண்ணப்பத்தையும்
முன்வைத்தார்.