2012-11-05 15:41:23

கவிதைக் கனவுகள் – கொடுக்கிற காலம்


கொடுக்கிற காலம் நெருங்குவதால் - இனி
எடுக்கிற அவசியம் இருக்காது.
இருக்கிறதெல்லாம் பொதுவாய்ப் போனால்
பதுக்கிற வேலையும் இருக்காது.
ஒதுக்கிற வேலையும் இருக்காது.
உழைக்கிற நோக்கம் உறுதியாயிட்டா
கெடுக்கிற நோக்கம் வளராது.

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா,
கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா,
எந்த நேரமும் சண்டை ஓயாத முரட்டு உலகமடா,
விதவிதமான பொய்களை வைத்துப் புரட்டும் உலகமடா,சிலர்குணமும் இதுபோல் குறுகிப்போகும் கிறுக்கு உலகமடா.

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்







All the contents on this site are copyrighted ©.