அச்சுறுத்தலுக்குப்பின் இந்தோனேசிய கிறிஸ்தவ கோவில் செபவழிபாடு இரத்து
நவ.05,2012. இந்தோனேசியாவின் மேற்கு ஜாவாவிலுள்ள கிறிஸ்தவக் கோவில் ஒன்றில் இடம்பெறவிருந்த
செபவழிபாட்டைத் தடைச்செய்துள்ளனர் அப்பகுதி இஸ்லாமிய ஆர்ப்பாட்டக்காரர்கள். மேற்கு
ஜாவாவின் பெகாசி மாவட்டத்தின் Protestant கிறிஸ்தவ சபை கோவிலுக்கு முன் வந்த சில இஸ்லாமிய
ஆர்ப்பாட்டக்காரர்கள், ஒலிபெருக்கிகள் மூலம் செபவழிபாடு தொடரமுடியாமல் இடையூறு செய்ததோடு,
கிறிஸ்தவர்களை அச்சுறுத்தியும் உள்ளனர். வன்முறைகள் இடம்பெறாமல் தடுக்க வேண்டுமெனில்
கிறிஸ்தவ வழிபாடுகள் நிறுத்தப்படவேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியது குறித்து தன் கண்டனத்தை
வெளியிட்டுள்ளார் கிறிஸ்தவ சபை அருள்தந்தை Palti Panjaitan.