இந்தியாவில் பணிபுரியும் இருபால் துறவியர் கூட்டமைப்பின் தலைவராக சலேசிய சபை அருள்தந்தை
Thomas Vattathara
நவ.01,2012. இந்தியாவில் பணிபுரியும் இருபால் துறவியர் கூட்டமைப்பின் தலைவராக சலேசிய
சபையைச் சார்ந்த அருள்தந்தை Thomas Vattathara தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர்
28 முதல் இப்புதன் முடிய ஹைதராபாத் நகரில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் இந்தியாவின் பல்வேறு
துறவியர் சபைத் தலைவர்களும், மாநிலத் தலைவர்களும் என 550க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், Guwahati மாநிலத்தின் சலேசியத் தலைவராக பணியாற்றிய அருள்தந்தை Vattathara
இச்செவ்வாயன்று தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியாவில் 334 துறவியர் சபைகளைச் சார்ந்த
1,25,000 இருபால் துறவியர் பணி புரிகின்றனர். கல்வி நிலையங்கள், மருத்துவ மனைகள், சமுதாய
நிறுவனங்கள் மூலம் பணி செய்யும் இருபால் துறவியரில் 822 பேர் தலைமைப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.