2012-10-31 16:21:46

பிரச்சனைகள் தீர்வதற்கு உரையாடல் ஒரு முக்கிய கருவியாக உள்ளது - கர்தினால் John Tong


அக்.31,2012. பல தவறான எண்ணங்களும், முற்சார்பு எண்ணங்களும் சீரமைக்கப்பட்டு, பிரச்சனைகள் தீர்வதற்கு உரையாடல் ஒரு முக்கிய கருவியாக உள்ளது என்று ஹாங்காங் பேராயர் கர்தினால் John Tong கூறினார்.
திருப்பீடத்திற்கும், சீன நாட்டுக்கும் இடையே உரையாடல்களை உருவாக்க ஒரு திருப்பீட அவை நிறுவப்படுவது நலம் என்று திருப்பீட விசுவாசப்பரப்புப் பேராயத்தின் தலைவரான கர்தினால் Fernando Filoni, அண்மையில் ஒரு பரிந்துரையைக் கூறியுள்ளார்.
அண்மையில் நடந்து முடிந்த உலக ஆயர்கள் சிறப்பு மாமன்றத்தின் தலைவராகப் பணியாற்றிய கர்தினால் John Tong, இப்பரிந்துரைக்குத் தன் முழு ஆதரவு உண்டு என்று Fides செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியொன்றில் கூறியுள்ளார்.
கர்தினால் Filoniயின் பரிந்துரை அடங்கிய கட்டுரையில், எந்த ஒரு கலாச்சாரத்திலும் மதச் சுதந்திரம் ஒரு முக்கிய பங்கு வகிக்கவேண்டும் என்று கூறியிருப்பதையும் சுட்டிக் காட்டிப் பேசிய கர்தினால் John Tong, சீனாவில் வாழும் கிறிஸ்தவர்கள் நாட்டுக்கும் திருஅவைக்கும் உகந்த குடிமக்களாக வாழ உரையாடல் வழிவகுக்கும் என்பதை வலியுறுத்திக் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.