2012-10-31 15:15:36

நவ. 01, 2012. – கவிதைக் கனவுகள்............. என்று இருந்தான்……. எழுதியவர் : ஈரோடு தமிழன்பன்


பள்ளியில் பையனைச்
சேர்த்து விட்டால்
கவலை தீரும் என்றிருந்தான்;

பள்ளியில்
சேர்த்த கவலை
படிப்பு முடிந்தால் தீரும்
என்றிருந்தான்;

மூன்றாம் வகுப்பில்
பையன் தேறிய கவலை
வேலை ஒன்று கிடைத்தால் தீரும்
என்றிருந்தான்;

வேலையில்
உயர்வு கிடைக்காதா என்று
கிடைத்த வேலையில்
கவலை தீராதிருந்தான்.

கிடைத்த வேலை உயர்வு
நிரந்தரமாகாதா
என்ற கவலை நீங்கும் முன்
வரதட்சணை
வாரிக் கொடுத்துப்
பெண்ணொருத்தியைக்
கட்டிக் கொடுக்க
வராதா இடம் என்று
கவலைப் பட்டான்;

பையனைவிட இப்படிக்
கவலையை வளர்த்து வளர்த்தே
அவன் காலமானான்.

கவலைப் படாமலே
பையன்
அடக்கம் செய்தான்
அப்பனை.








All the contents on this site are copyrighted ©.