வரலாற்றில் இல்லாத அளவுக்கு நீதித்துறைக்கும், அரசுக்கும் இடையில் முரண்பாடுகள் நிலவுகின்றன
: மனித உரிமைகள் கண்காணிப்பகம்
அக்.30, 2012. இலங்கையின் வரலாற்றில் எந்த ஓர் அரசும் மேற்கொள்ளாத அளவில் நீதித்துறைக்கு
எதிரான வன்முறைகளைத் தற்போதைய அரசு மேற்கொண்டு வருவதாக, ஆசிய மனித உரிமைகள் கண்காணிப்பகம்
குற்றம் சுமத்தியுள்ளது. நீதித்துறையைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக நேரடியான மற்றும்
மறைமுகமான தாக்குதல்களை நடத்தி, தொடர்ந்தும் நீதித்துறையை தமது கட்டுப்பாட்டில் வைத்துக்
கொள்ள அரசு முயற்சிக்கிறது எனக்கூறும் ஆசிய மனித உரிமைகள் கண்காணிப்பகம், இவ்வாறான வன்முறைகள்
விரைவில் நீக்கிக் கொள்ளப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளது. அரசின் தொலைக்காட்சிகளைப்
பயன்படுத்தி, நீதித்துறைக்கு எதிரான அவதூறுகளையும் அரசு தொடர்ச்சியாக முன்வைத்து வருவதும்
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.