பள்ளிக் குழந்தைகளுக்கு எதிரான அத்துமீறல்கள் மிசோரமில் அதிகரிப்பு : ஆய்வில் அதிர்ச்சி
தகவல்
அக்.30, 2012. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரமில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல்
அத்து மீறல்கள் அதிகரித்து வருவதாக, அதாவது, பள்ளிகளிலும், வீடுகளிலும், குழந்தைகள்,
பாலியல் கொடுமைக்கு உட்படுத்தப்படுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. வடகிழக்கு இந்திய
மாநிலங்களில் ஒன்றான, மிசோரமில், பள்ளிக் குழந்தைகளுக்கு எதிரான, " பாலியல் ' கொடுமைகள்,
அதிகரித்து வருவதாக, புகார்கள் வந்ததைத்தொடர்ந்து, மிசோரம் மாநில சமூக நலத்துறை, தன்னார்வ
நிறுவனம் மற்றும் மனித உரிமை சட்ட அமைப்பு ஆகியவை இணைந்து நடத்திய ஆய்வில் இவ்வுண்மைகள்
வெளிவந்துள்ளன. இதில் கிடைத்த தகவல்கள் அதிர்ச்சியளிப்பதாக உள்ளன. குழந்தைகளுக்கு
நேர்ந்த பாலியல் கொடுமைகள் அனைத்தும், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ஆசிரியர்கள் மூலமே
நடந்துள்ளன எனவும், 2003 முதல் 2009ம் ஆண்டு வரையில், மிசோரமில், குழந்தைகள் மீதான பாலியல்
கொடுமைகள் குறித்த வழக்குகள், 630 பதிவாகிஉள்ளன எனவும் தெரியவந்துள்ளது. மிசோரம் மாநில
அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த ஆய்வு முடிவுகள், செக்ஸ் தொல்லை கொடுப்பவர்களிடம்
இருந்து, தங்களைக் காத்துக் கொள்வது குறித்து, குழந்தைகளுக்கு பாலியல் கல்வி அவசியம்
என்ற கருத்தை வலியுறுத்தியுள்ளது.