அக்.30, 2012. இலங்கையின் திருகோணமலை பாலையூற்று பூங்கா சந்தியில் இருந்த லூர்து அன்னைமரி
திருவுருவம் ஒன்று அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து
வரும் செய்திகள் கூறுகின்றன. பல ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த அன்னைமரி திருவுருவம்
சனிக்கிழமை காலையில் சேதமாக்கப்பட்டிருக்கலாம் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இது
தொடர்பாக திருகோணமலை காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. மூன்று தினங்களுக்கு முன்னதாக
ஹஜ் பெருநாள் தினத்தன்று அநுராதபுர மாவட்டத்தில் உள்ள ஒரு முஸ்லிம் வழிபாட்டிடம் தீ வைத்து
எரிக்கப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.