2012-10-27 15:37:22

சீனக் கத்தோலிக்கரின் உலக மாநாடு


அக்.27,2012. பொதுநிலை விசுவாசிகளின் மறைப்பணிகள் குறித்த ஆறுநாள் மாநாடு ஒன்றை உலகின் 27 நகரங்களைச் சேர்ந்த ஏறத்தாழ 170 சீனக் கத்தோலிக்கர் ஹாங்காங்கில் இச்சனிக்கிழமையன்று தொடங்கியுள்ளனர்.
ஹாங்காங் மறைமாவட்டம் சிறப்பித்து வந்த பொதுநிலையினர் ஆண்டை நிறைவு செய்யும் விதமாக இந்த மாநாடு நடைபெறுகிறது.
தொலைத்தொடர்புகளும் பயண வசதிகளும் தொழில்நுட்ப ரீதியாக வளர்ந்துள்ள ஹாங்காங்கில் இம்மாநாட்டை நடத்துவது பொருத்தமாக இருப்பதாகத் தெரிவித்த ஹாங்காங் மறைமாவட்ட முதன்மைக்குரு Dominic Chan Chi-ming, கடந்த 30 ஆண்டுகளில் வளர்ந்துள்ள பொதுநிலையினரின் மறைப்பணிகள் குறித்து விளக்கினார்.







All the contents on this site are copyrighted ©.