கூடங்குளம்: வட இலங்கையிலும் எதிர்ப்புத் துண்டுப் பிரசுரங்கள்
அக்.27,2012. கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரானப் போராட்டங்களுக்கு ஆதரவாக, இலங்கையின்
வட பகுதியில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. கூடங்குளம் அணுமின் நிலையத்தால்
இலங்கையில் உள்ள மக்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து விளக்கமளிக்கும் விதமாக
இந்தத் துண்டுப் பிரசுரங்கள் அமைந்துள்ளன. மேலும், கூடங்குளம் பகுதி மக்களின் எதிர்ப்பை
இந்திய அரசு பொருட்படுத்தாமல் இருப்பதால் அம்மக்களுக்கு ஆதரவாகத் தாங்களும் கூடங்குளம்
அணுமின் நிலையத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறோம் என்றும் அந்தத் துண்டுப் பிரசுரங்களில்
கூறப்பட்டுள்ளன. “மக்கள் போராட்டக் குழு” என்ற அமைப்பு வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம்
ஆகிய நகரங்களில் இதனை ஒழுங்கு செய்திருந்தது.