2012-10-26 16:29:22

சிரியாவிலுள்ள டிராப்பிஸ்ட் அருள்சகோதரிகள் நம்பிக்கையின் அடையாளம்


அக்.26,2012. சிரியாவில் மக்கள் துன்ப சோதனைகளை எதிர்கொள்ளும் இவ்வேளையில், தாங்கள் அந்நாட்டிலிருந்து செல்ல முடியாது என, அந்நாட்டில் மறைப்பணியாற்றும் இத்தாலிய டிராப்பிஸ்ட் அருள்சகோதரிகள் கூறினர்.
மேற்கு சிரியாவில் Homs மற்றும் Tartous நகரங்களுக்கு இடையே Azeir என்ற சிறிய மாரனைட் கிராமத்திலுள்ள டிராப்பிஸ்ட் துறவு இல்லத்தில் வாழும் ஐந்து அருள்சகோதரிகள், போரினால் பாதிக்கப்பட்டுள்ள கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் உதவி வருகின்றனர்.
செபங்கள் மற்றும் சகோதரத்துவ ஒன்றிப்பு மூலம் கடவுளின் உண்மையான பிரசன்னத்தை வழிபடும் இடமாகத் தங்களது துறவு இல்லம் இருக்கின்றது, இந்தத் துறவு இல்லம் ஓர் உறுதியான நம்பிக்கையின் அடையாளமாகவும் இருக்கின்றது எனவும் இச்சகோதரிகள் கூறியுள்ளனர்.
தங்களது இந்தச் சிறிய கிராமத்தில்கூட இளையோர் உட்பட பலர் கொல்லப்பட்டுள்ளனர் எனத் தங்களது இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள இச்சகோதரிகள், சண்டை சமயத்தில் முஸ்லீம்களும் ஆறுதல்தேடி டிராப்பிஸ்ட் துறவு இல்லத்திற்கு வந்ததாகவும் கூறியுள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.