2012-10-26 16:28:29

உலக ஆயர்கள் மாமன்றத்தின் 20வது பொது அமர்வு


அக்.26,2012. புதிய நற்செய்தி அறிவிப்புப்பணி குறித்த 13வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் 20வது பொது அமர்வு இவ்வெள்ளி காலை தொடங்கியது.
258 மாமன்றத் தந்தையர் பங்கு பெற்ற இப்பொது அமர்வில், இந்த மாமன்றத்தின் இறுதியில் வெளியிடப்படும் செய்தி சமர்ப்பிக்கப்பட்டு அது குறித்த வாக்கெடுப்பும் நடைபெற்றது.
“இறைமக்களுக்குச் செய்தி” எனும் தலைப்பிலான இச்செய்தி, இத்தாலியம், ப்ரெஞ்ச், ஆங்கிலம், ஜெர்மானியம், இஸ்பானியம் ஆகிய மொழிகளில் சமர்ப்பிக்கப்பட்டது. பலத்த கரகோஷங்களுடன் வரவேற்பையும் அது பெற்றது.
மேலும், இம்மாமன்ற விரிவுரையாளர் தலைமையில் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைகள் குறித்த ஆய்வுகளும் இடம்பெற்றன. 17 பேர் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.
இப்பரிந்துரைகளின் இறுதித் தொகுப்பு சமர்ப்பிக்கப்படுவது, இவ்வெள்ளி மாலையில் இடம்பெறும் 21வது பொது அமர்வின் கால அட்டவணையில் உள்ளது.








All the contents on this site are copyrighted ©.