2012-10-25 16:26:46

சீன ஆயர்களுக்கு 13வது உலக ஆயர்கள் மாமன்றத் தந்தையர் அனுப்பியுள்ள கடிதம்


அக்.25,2012. சீனாவில் வாழும் கிறிஸ்தவர்களின் செபங்கள், அவர்கள் அனுபவிக்கும் துயரங்கள், மகிழ்வுகள் அனைத்தையும் இறைவன் கண்ணோக்குகிறார், அவர்களின் நம்பிக்கை ஏனைய கிறிஸ்தவர்களின் நம்பிக்கையை வளர்க்கிறது என்று 13வது உலக ஆயர்கள் மாமன்றத் தந்தையர் கூறியுள்ளனர்.
வத்திக்கானில் தற்போது நடைபெற்றுவரும் 13வது உலக ஆயர்கள் மாமன்றத்திற்கு சீனாவிலிருந்து வர இயலாத ஆயர்களின் சார்பில் Fengxiang மறைமாவட்ட ஆயர் Lucas Li Jingfeng, திருத்தந்தைக்கும், மாமன்றத் தந்தையருக்கும் அனுப்பியிருந்த ஒரு கடிதத்திற்கு இச்செவ்வாயன்று பதில் அனுப்பப்பட்டுள்ளது.
சீன மக்களின் சார்பாக, தாய்வான், ஹாங்காங் ஆகிய பகுதிகளிலிருந்து ஆயர்கள் மாமன்றத்தில் இடம் பெற்று வருகின்றனர் என்பதை சுட்டிக்காட்டும் இந்தப் பதிலுரையில், வருங்காலத்தில் நடைபெறும் மாமன்றங்களில் சீனாவிலிருந்தும் ஆயர்கள் கலந்துகொள்ளும் அருளை இறைவன் வழங்குவார் என்ற நம்பிக்கை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.