2012-10-24 15:30:37

புதிய நற்செய்தி அறிவிப்புப்பணி என்ற இப்புதிய அலையினால், பாகிஸ்தானும் பயன்பெறும் - லாகூர் துணை ஆயர்


அக்.24,2012. புதிய நற்செய்தி அறிவிப்புப்பணி என்ற இப்புதிய அலையினால், மேற்கத்திய நாடுகள் மட்டுமல்லாமல், ஆசிய நாடுகளும், குறிப்பாக, முஸ்லிம் பெரும்பான்மை நாடான பாகிஸ்தானும் பயன்பெறும் என்று பாகிஸ்தான் ஆயர் ஒருவர் கூறினார்.
புதிய நற்செய்தி அறிவிப்புப்பணி குறித்த 13வது உலக ஆயர்கள் மாமன்றத்தில் கலந்துகொள்ள வந்திருக்கும் லாகூர் துணை ஆயர் Sebastian Shaw, நம்பிக்கை ஆண்டில், பாகிஸ்தான் திருஅவை சந்தித்துவரும் சவால்களைக் குறித்து Fides செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.
பள்ளிகளில் பயன்படுத்தப்படும் பாடப் புத்தகங்களில் காணப்படும் குறைகளை தலத்திருஅவை பாகிஸ்தான் அரசின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளது என்பதைக் குறிப்பிட்ட ஆயர் Shaw, வளரும் தலைமுறையினரை சகிப்புத் தன்மையுடன் வளர்ப்பது அரசின் முதன்மையான கடமை என்று கூறினார்.
'இஸ்லாமிய நாடுகளில் புதிய நற்செய்தி அறிவிப்புப்பணி' என்ற தலைப்பில் இம்மாதம் 29ம் தேதி ஆயர் Shaw இலாத்தரன் பாப்பிறை பல்கலைக்கழகத்தில் உரையாற்றுவார் என்று Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.