அக்.20,2012. உணவுப் பொருள்களின் கடுமையான விலையேற்றம் காரணமாக 80 இலட்சம் இந்தியர்கள்
வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. விவசாய உற்பத்தி பாதிப்பு,
உரங்களின் விலை ஏற்றம், விவசாய நிலங்கள் போதிய அளவில் இல்லாதது, வறட்சி, எண்ணெய்விலை
ஏற்றம் உள்ளிட்டவைகளும் இந்த வறுமை நிலைக்கு முக்கிய காரணங்கள் என ஐ.நா. அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மைக் கழகம் தெரிவித்துள்ள தகவலின்படி,
ஒரு குடும்பத்தின் வருமானத்தில் 65 விழுக்காட்டுக்கும் அதிகமான பணம் உணவிற்காகச் செலவிடப்படுகிறது.
பங்களாதேஷ், நேபாளம், இலங்கை ஆகிய நாடுகளில் உணவுப் பொருள்களின் விலை குறைவாகவே
உள்ளதாகவும், அதனால் அவர்கள் உணவிற்காகச் செலவழிக்கும் தொகை குறைவானது எனவும் ஐ.நா.
தெரிவித்துள்ளது.