2012-10-20 15:31:45

உலக ஆயர்கள் மாமன்றத்தில் : கிறிஸ்தவர்கள் நம்பிக்கையால் பயத்தை மேற்கொள்கின்றனர்


அக்.20,2012. கிறிஸ்தவர்கள், மனித இதயத்தில் கடவுளுக்கானத் தாகம் இருப்பதை உணர்ந்தவர்களாய், நம்பிக்கையால் பயத்தை மேற்கொண்டு, இவ்வுலகில் துணிவுடன் நற்செய்தியை எடுத்துச் செல்கின்றனர் என்பது உலக ஆயர்கள் மாமன்றத்தின் இறுதியில் வெளியிடப்படும் முன்வரைவுச் செய்தியின் சுருக்கம் எனக் கூறப்பட்டுள்ளது.
இச்சனிக்கிழமை காலை தொடங்கிய, புதிய நற்செய்தி அறிவிப்புப்பணி குறித்த 13வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் 18வது பொது அமர்வில் இந்த முன்வரைவு சமர்ப்பிக்கப்பட்டு அது குறித்த கருத்துப் பரிமாற்றங்களும் இடம்பெற்றன.
இந்தக் கருத்துப் பரிமாற்றங்களை வைத்து இச்செய்தியில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு, புதிய செய்தி வரைவு ஒன்று வருகிற வெள்ளிக்கிழமையன்று வாக்கெடுப்புக்கு விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வாழ்வுதரும் சுத்தமான நீரால் நிரப்பப்படுவதற்குக் காத்திருக்கும் ஒரு காலியான தண்ணீர் ஜாடி என்பது, இந்தச் செய்தியின் உருவகமாகவும் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த உலக ஆயர்கள் மாமன்றத்தின் மூன்று தலைவர் பிரதிநிதிகளில் ஒருவராகிய கர்தினால் ROBLES தலைமையில் தொடங்கிய இச்சனிக்கிழமை காலை பொது அமர்வில் 250 மாமன்றத் தந்தையர் கலந்து கொண்டனர்.







All the contents on this site are copyrighted ©.