2012-10-19 15:42:01

நேபாள மக்கள் மனமாற்றம் அடைய நம்பிக்கை ஆண்டு நல்ல வாய்ப்பு


அக்.19,2012. செபம் மற்றும் கத்தோலிக்கத் திருஅவையின் போதனைகள் வழியாக, நேபாளக் கத்தோலிக்கச் சமுதாயம் கடவுள்மீதான தங்களது நம்பிக்கையைப் புதுப்பித்து ஆழப்படுத்த வேண்டும் என நம்பிக்கை ஆண்டு தொடக்கத் திருப்பலியில் வலியுறுத்தப்பட்டது.
காத்மண்டு விண்ணேற்பு அன்னைமரி ஆலயத்தில் திருப்பலி நிகழ்த்தி இந்த நம்பிக்கை ஆண்டைத் தொடங்கி வைத்த அருள்பணி இராபின் ராய், சமயச்சார்பற்ற நாடாக மாறிக்கொண்டிருக்கும் தற்போதைய நேபாளத்தில் மக்கள், மிகுந்த மத உணர்வோடு, புனிதமானவற்றை இன்றும் மதித்து நடக்கிறார்கள் என்று கூறினார்.
அக்டோபர் 11ம் தேதி நடைபெற்ற இத்திருப்பலியில் கத்தோலிக்கர் அல்லாத பிற மதத்தவரும் கலந்து கொண்டனர்.







All the contents on this site are copyrighted ©.